Monday 23 March 2009

என் ரோசாப்பூ சேலைக்காரி....

கவிதை - இளங்கவி.......


குட்டைப் பாவாடையுடன்
மனதை கொள்ளை கொள்ளும்
சிரிப்பு கொண்டு
நல்லூர் வீதியெல்லாம் சுற்றிடுவாய்
நானும் உன்னை சுற்றிடுவேன்......

கரம்சுண்டல் வாங்கி வந்து
என் கைகளிலே வைத்திடுவாய்
வாங்க மறுத்துவிட்டால்
என் காலை மிரித்திடுவாய்.....
கடைக்கண் பார்வைகொண்டும்
அடித்திடுவாய்....

நல்லூர் முருகனை மறந்துவிட்டு
உனை உன்முடிபோல தொடர்ந்திடுவேன்
முழு கண்கள் பார்க்கமுதல்
இருளாக மறைந்திடுவேன்....

சில திருவிழாக்கள் ஓடி
உன் சிறு அழகெல்லாம் வளர்ந்துவிட
ரோசாப்பூ சேலைகட்டி
என்மனதை ஜோராக இழுத்தவளே...!

சிறுவயதில் நீ தந்த
பொரிகடலை சுவையும் போய்....
நீ சிறிதாக வாங்கித்தரும்
கரம்சுண்டல் கசந்தும் போய்....
உன் காந்த இதழ் மட்டும்
கொக்கின் கண்களிலே மீனாக.....
கோவில் வீதியெங்கும்
அலைந்திடுவேன் உன்
இதழ் சுவைக்க தேனாக.....

இருளான பக்கத்தில்
கொப்பருக்குத் தெரியாமல்
கிஸ் அடிக்கத் துடித்திடுவேன்.....
கொப்பர் நான் தொடர பார்த்துவிட்டால்
கொட்டக்கொட்ட முழித்திடுவேன்....

என் முயற்சியின் பலனை
எனக்கு முழுவதுமாய் தந்தவளே...!
என் மூச்செல்லாம் நீயாகி
என்னை முழுதாகத் தின்றவளே.....

நம் மனதெல்லாம் சேர்ந்து
மகிழ்வாக வாழ முதல்
உன் கூட்டை சிதைத்துவிட்டான்
எம்மை கொன்றொளிக்கும் சிங்களவன்.....

அன்றுமுதல் கோவில் வீதியிலே
என் குளிர் நிலவை காணவில்லை
நான் பெற்றிருந்த முத்தத்தின்
நினைவுகளும் நீங்கவில்லை.....

கூடு இழந்த குருவியாய்
நீ எங்கோ சென்றுவிட....
சிங்களவன் கொடுமையினால்
நானும் புலம்பெயர்ந்தேன்
இங்கே வந்து விட....

சிலகாலம் சென்றறிந்தேன்
என் செல்லம் நீ வன்னியிலே.....
தொடர்பின்றி இருந்தாலும்
உன் நினைவெல்லாம் என் மனதினிலே.....
என் பாசமென்னும் பட்டினிக்கு
உணவழித்த ராசாத்தி.....
எத்தனை நாள் அம்மா
நீ உணவருந்தி நாளாச்சு.......

கொஞ்சம் பொறுத்துக்கொள்
வந்திடுமே நம்
வணங்கா மண் அங்கே....
உங்களை வாழவைக்கும் உணவினிலே
என் அன்பும் கலந்திருக்கும்
பார் அங்கே....
கடலிலே எதிரியதை அழித்தாலும்
என் அன்புணவு உனைச்சேரும்
கடல்மீன்கள் வழயாக
என் கரைந்த உயிர்
உன் உடல் சேரும்.....

என் உணவுத் துளிகளிலே
பழைய முத்தத்திற்கு பதில்
முத்தமொன்று வைத்திருக்கேன்
முழுவதுமாய் ஏற்றுவிடு.....
திருமணம் முடிந்திருந்தால்
என் முத்தத்தை கடலிலே கரைத்துவிடு.......

கலங்காதே என் கண்மணியே
உன் கண் நீங்கா காதலன் நான்; நீ
என் கனவெல்லாம் ஆட்சிசெய்யும்
என் அன்புத் தேவதை தான்.....


இளங்கவி

Sunday 22 March 2009

போராளிப் பெண்ணுக்கு அம்மாவின் கடிதம்....

கவிதை....


அன்புள்ள மகளுக்கு
உன் அம்மாவின் ஆசிர்வாதம்
காவலுக்கு செல்கிறேன் என்றாய்
எம் இனத்தை காக்க
எழுந்துவிட்டேன் என்றாய்..... !
உன் ஆசைத்தம்பியை
பட்டினிக்கு பறிகொடுத்தாய்
அவனைப்போல் பலபேரைக்காக்க
பகைவனுடன் மோதச்சென்றாய்

எனக்கும் தெரியும்
நீ புலியாக பிறக்கவில்லை
புலியாக மாற்றப்பட்டாய்
எங்களின் விடுதலைப் போரிலே
புள்ளியாக என்னையும் ; எதிரி
புலியாக வைத்துவிட்டான்
அவன் உருவாக்கிய புலிகலெல்லாம்
பிரம்மிட்டின் உருவம் போல்
வியாபித்து எழுதிடுவர் ; என்று
எதிரி இன்னமும் நினைக்கவில்லை
என்று எழுதிவைத்து நீ சென்றாய்....

பட்டினி எங்களுக்கு
பழகிவிட்ட ஒன்று என்றாய்
பசிதாங்காப் பிள்ளைக்கு
அது பரிதாபச் சாவென்றாய்
பல குண்டு போட்டு
அன்றாடம் படுகொலைகள்
அத்துடன் பட்டினியும் போட்டு
தொடங்கிவிட்டான் நர பலிகள்...

இதை உலக நாடனைத்தும்
பார்க்காத ஒவ்வோர் கணமும்
பல புலிகள் பிறக்கின்றார்
நம் மண்ணை புண்ணிய பூமியாக்க
எதிரியுடன் போரை முன்னெடுக்கின்றார்...!

மேற்குலகே நீர் சேர்ந்து
இனப்படிகொலையைத் தடுத்துவிடு...!
எம்மையும் தனித்து
நம் ஈழத்தில் வாழவிடு...!
எமை நீங்கள் வாழவிட்டால்
ஆயுதம் பிடித்த கைகள்
அரசியல் சாசனங்க்கள் எழுதாதா...?
நம் அழுக்குத்தண்ணீரும்
அமுதமாய் மாறாதா...?
நம் பசிபோக்கும் அளவிற்கு
எம் விளை நிலங்கள் விழையாதா...?
நாம் பதுங்கும் பதுங்குகுழியில்
பல ரயில்கள் ஓடாதா...?
இஸ்ரேலின் பாலை வனங்கல் கூட
பளிங்கு மண்டபமாய் மாறுகையில்
எம் தமிழீழ நிலங்கலிலே
பொன் மலைகள் எழும்பாதா...?

கொலைக்களத்தில் பிறந்து
முதலான முலைப்பால்
முண்டி முண்டி குடித்தபின்னர்
எதிரியின் குண்டுவீச்சில்
முலையொருபக்கம்; தாயின்
உடல் ஒருபக்கம்
இதை பார்த்து வளர்ந்த பிள்ளை
என்ன புத்தனாவா வளர்ந்திடுவான்...?
புலியாய் தான் வளர்ந்திடுவான்....!

சர்வதேசமே அறிந்துகொள்....!
எதிரியை அனைத்தயும் விட்டிடச்சொல்....!
புள்ளியொன்றை அழித்துவிட்டு
புலியை அழித்துவிட்டான்: என்று
சொல்லும் சிங்களனிடம்
சேதியொன்றை எடுத்துச் செல்
தமிழன் வாழ விட்டால்
எதிரியின் தலைதப்பும் என்று சொல்....!
இதைவிட்டு நம்மை அழிக்கவந்தால்
குமரிக் கண்டத்தில்
இந்தத் தீவு மட்டும் மிதந்து நிற்கும்
கோணேஸ்வரக் கடலில்
கோத்த பாயக் குலத்தின்
குருதியில்தான் உன் கப்பல் மிதக்கும்....

மகளே..! கடிதம் பார்த்து
உணர்வெல்லாம் பொங்கிவிட்டேன்
உலக்குக்கு நீ சொன்ன
உண்மையெல்லாம் அறிந்து கொண்டேன்
உன் மனதின் ஆதங்கம்
அனைத்தையும் தெரிந்து கொண்டேன்
நானும் இம் மண் காக்க
சில நாட்களிலே பயிற்சிகொள்வேன்
உன் களத்தில் முன்னரங்கை
காக்கவென்று நானும் போரிடுவேன்
கலக்கம் எதுமின்றி
காத்திடு நம் மண்ணை
உன் வீரம் கண்டுகொள்ள
களத்துக்கு நானும் விரைகின்றேன்....



இளங்கவி

நம் தலைவனின் கனவு நிஜமாக.....

கவிதை - இளங்கவி


அடிமை வாழ்வில்
குப்பையாய் கிடந்தோம்
கூட்டுவார் இன்றி
காற்றுக்கும் பறந்தோம்
ஏய் தமிழா...!
உன் தேச மண்ணில்
குப்பையாய் கிடக்கின்றாய்
கூனிக் கிடந்து
கூன் விழுந்திட்டாய் ; என்று
இந்தக் குப்பை மேட்டிலே
ஓர் பொறியாக விழுந்தாய்
சிறுதணல் மூட்டினாய்
சிறிதாகவும் புகைந்தாய்; ;பின்
செந்தணல் ஆகி
விடுதலை தீயை மூட்டினாய்
இன்றோ கோடி தமிழனின்
மனங்களில் கொழுந்து விட்டெரிந்து
விடுதலைத் தீயாய்
வீறுகொண்டு எரிகிறாய்......!

வேதனை வாழ்விலும்
வீரியம் தந்தவன்.....
எங்களின் வாழ்வுக்காய்
தன் வாழ்வையும் மறந்தவன்......
இருபதில் தொடங்கி
இருபதினாயிரம் கண்டாய்......
இன்னமும் காண்பாய்
இறுதித் தமிழனையும் மாற்றுவாய்...!

எதிரியின் பலமெல்லாம்
உன் காலில் எறும்பாய்......
எம்மவர் துரோகமும்
உனக்கு கசக்கும் மருந்தாய்.......
உன் கரும்புலிக் குஞ்சுகள்
நம் ஈழத்தின் தடுப்பாய்........
எமை காக்கும் புலிப்படை
உன் கரங்களில் பலமாய்......
எம்மை காக்கும் தெய்வம் நீ.....
உலகுக்கே கசக்கும் வீரம் நீ......

நீ மூட்டிய தீயின்றி
எதிரியை உருக்கிடும் இரும்பாய்....
நீ கண்ட கனவின்று
நிகழப்போகுது நிஜமாய்....
புலிக்கொடியின்று நம்
கொடியென ஏற்றார்......
நீ கண்ட நம் ஈழம்
நாளை நம் நாடென ஏற்பார்.....

அதுவரை ஓயாது நம்போர்
நம் கரங்கள் சேரும்......
எம் கூச்சலின் சக்தி
உன் கரத்துக்கு பலம்சேர்க்கும்.......
ஒன்றுசேர்ந்த நம் எழுச்சி
எமக்கு நம் விடியலைக் காட்டும்.......
உன் துணை கொண்டு விரைவில்
நம் விடுதலை மீட்கும்......


இளங்கவி