Monday 23 March 2009

என் ரோசாப்பூ சேலைக்காரி....

கவிதை - இளங்கவி.......


குட்டைப் பாவாடையுடன்
மனதை கொள்ளை கொள்ளும்
சிரிப்பு கொண்டு
நல்லூர் வீதியெல்லாம் சுற்றிடுவாய்
நானும் உன்னை சுற்றிடுவேன்......

கரம்சுண்டல் வாங்கி வந்து
என் கைகளிலே வைத்திடுவாய்
வாங்க மறுத்துவிட்டால்
என் காலை மிரித்திடுவாய்.....
கடைக்கண் பார்வைகொண்டும்
அடித்திடுவாய்....

நல்லூர் முருகனை மறந்துவிட்டு
உனை உன்முடிபோல தொடர்ந்திடுவேன்
முழு கண்கள் பார்க்கமுதல்
இருளாக மறைந்திடுவேன்....

சில திருவிழாக்கள் ஓடி
உன் சிறு அழகெல்லாம் வளர்ந்துவிட
ரோசாப்பூ சேலைகட்டி
என்மனதை ஜோராக இழுத்தவளே...!

சிறுவயதில் நீ தந்த
பொரிகடலை சுவையும் போய்....
நீ சிறிதாக வாங்கித்தரும்
கரம்சுண்டல் கசந்தும் போய்....
உன் காந்த இதழ் மட்டும்
கொக்கின் கண்களிலே மீனாக.....
கோவில் வீதியெங்கும்
அலைந்திடுவேன் உன்
இதழ் சுவைக்க தேனாக.....

இருளான பக்கத்தில்
கொப்பருக்குத் தெரியாமல்
கிஸ் அடிக்கத் துடித்திடுவேன்.....
கொப்பர் நான் தொடர பார்த்துவிட்டால்
கொட்டக்கொட்ட முழித்திடுவேன்....

என் முயற்சியின் பலனை
எனக்கு முழுவதுமாய் தந்தவளே...!
என் மூச்செல்லாம் நீயாகி
என்னை முழுதாகத் தின்றவளே.....

நம் மனதெல்லாம் சேர்ந்து
மகிழ்வாக வாழ முதல்
உன் கூட்டை சிதைத்துவிட்டான்
எம்மை கொன்றொளிக்கும் சிங்களவன்.....

அன்றுமுதல் கோவில் வீதியிலே
என் குளிர் நிலவை காணவில்லை
நான் பெற்றிருந்த முத்தத்தின்
நினைவுகளும் நீங்கவில்லை.....

கூடு இழந்த குருவியாய்
நீ எங்கோ சென்றுவிட....
சிங்களவன் கொடுமையினால்
நானும் புலம்பெயர்ந்தேன்
இங்கே வந்து விட....

சிலகாலம் சென்றறிந்தேன்
என் செல்லம் நீ வன்னியிலே.....
தொடர்பின்றி இருந்தாலும்
உன் நினைவெல்லாம் என் மனதினிலே.....
என் பாசமென்னும் பட்டினிக்கு
உணவழித்த ராசாத்தி.....
எத்தனை நாள் அம்மா
நீ உணவருந்தி நாளாச்சு.......

கொஞ்சம் பொறுத்துக்கொள்
வந்திடுமே நம்
வணங்கா மண் அங்கே....
உங்களை வாழவைக்கும் உணவினிலே
என் அன்பும் கலந்திருக்கும்
பார் அங்கே....
கடலிலே எதிரியதை அழித்தாலும்
என் அன்புணவு உனைச்சேரும்
கடல்மீன்கள் வழயாக
என் கரைந்த உயிர்
உன் உடல் சேரும்.....

என் உணவுத் துளிகளிலே
பழைய முத்தத்திற்கு பதில்
முத்தமொன்று வைத்திருக்கேன்
முழுவதுமாய் ஏற்றுவிடு.....
திருமணம் முடிந்திருந்தால்
என் முத்தத்தை கடலிலே கரைத்துவிடு.......

கலங்காதே என் கண்மணியே
உன் கண் நீங்கா காதலன் நான்; நீ
என் கனவெல்லாம் ஆட்சிசெய்யும்
என் அன்புத் தேவதை தான்.....


இளங்கவி

No comments:

Post a Comment