இளங்கவி -தமிழீழகாதல்
காணாத இறைவனிடம்
வரம் கேட்கும் பக்தன் போல்
நீ காட்டா பார்வைக்காய்
காத்திருந்தேன் சிலவருடம்
காரணம் நீ தமிழீழச்சி என்பதால்.......
பெண்களின் உதடை
கொவ்வைப்பழமாக வர்ணிப்பார்
உன் உதட்டின் நிறமோ
கரு நாவல் பழம் போல
இருந்தும் முத்தமிட மனமேங்கிடும்
காரணம் நீ தமிழீழச்சி என்பதால்......
பெண்ணின் மார்பழகு
மாங்கனிக்கு உவமைகொள்ள
உந்தன் மார்பழகோ
தென்னம் குரும்பட்டியாய் ஒழிந்துகொள்ள
இருந்தாலும் ரசித்துக்கொள்வேன்
காரணம் நீ தமிழீழச்சி என்பதால்
நீ மறைந்திருக்கும் இதர அழகை
வர்ணிக்க மனமேங்கிறது
ஆனாலும் முடியவில்லை
காரணம் நீ தமிழீழச்சி என்பதால்
அதுதான் நம் தமிழீழத்தின்
காதலின் சிறப்பு என்பதாலும் தான்....
உன்னை அவ்வளவு பிடிக்கும்
என் கறுப்பி....!
இளங்கவி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment