Friday 24 July 2009

மழை....



மனதைத் தாலாட்டும்
இயற்கையின் இன்பம் நீ......

மகிழ்வான சிறுவயதின்
என்னை மகிழ்வித்த சொர்க்கம் நீ.....

சிறுவனாய் நான்.....

விளையாடி வரும்போது
வெப்பமாகும் என் தேகம்.....
மேலிருந்து நீ வந்து வந்து
குளிரவைப்பாய் என் தேகம்....
என் சூடான சுவாசமும்
சில்லென்று குளிர்ந்துவிடும்....
அதை இன்றும் நினைத்தாலும்
ஜில்லென்று சுகம் தரும்....

இளைஞனாய் நான்......

தெருவோரம் அமர்ந்து
தேடுவேன் என் பேரழகை....
திடீரென்று நீ வருவாய்
சினத்தையும் நீ தருவாய்.....

அந்த நேரம் என்
அழகுச்சிலை வருவாள்...
நீ துளிகளாய் அவள் முகத்தினிலே
தொட்டதுமே ஒட்டிடுவாய்....
ஒட்டிய துளியொன்று
அவள் மூக்குவளி இறங்கிவந்து
அவள் மேல் உதட்டை தொட்டுவிட....
அவள் அதை உள்ளிழுத்து
என் பக்கமாய் ஊதிவிட....
அப்போது அவள்
உதடுசொல்லும் ஜாலத்தில்
என்னுயிரைக் கொடுத்தவன் நான்....
அந்த மொழியை இன்றுவரை
என் இதயத்தில் ரசிப்பவன் நான்........
அதனாலே இன்றுவரை உன்னை
ரசிக்கும் கலைஞன் நான்.....

ஆனால் உன்னை எனக்கு
இப்பொது ஓரளவும் பிடிக்கவில்லை...

ஏனென்று கேட்காதே
எப்படிப் பதில் சொல்வேன்....
ஏங்கி நிற்கும் நம் உறவுகளின்
எதிர்காலம் என் சொல்வேன்....

நம் அனைத்து உறவுகளும்
முகாமில் அடைந்திருக்க
அங்கே ஒரு நாளேனும் உன் வருகை
உன்னை அருவருக்க வைக்கிறது.....

அன்றோ நீ எங்கள்
அழகுக்கு அழகு தந்தாய்

இன்றோ நீ இங்கே
அசிங்கமெல்லாம் கூட்டிவந்து
எங்களை அவலப்படுத்துகிறாய்......

பல்லாயிரம் கிருமிகளை
நம் பாதங்களில் சேர்க்கின்றாய்....
படுக்கும் இரவினிலும்
நம்மை பாடாய் படுத்துகிறாய்....

உன் தொல்லை போதும்
நாம் அழைக்கும் வரை
வர வேண்டாம்.....
அழையாத விருந்தாளியாய்
எங்களுக்கு அவலத்தை
தர வேண்டாம்.....

இளங்கவி

Tuesday 14 July 2009

என் இனிய முதலிரவு....



என் வலைப்பூவில் சிக்கிய
வண்ணத்துப் பூச்சியவள்....
என் நெஞ்சில் நிறங்கள் பலதூவி
நிறக்கோலம் போட்ட மயில்.....

வகை வகையாய் பேசி
என் நெஞ்சில் தேற்றினாள்....
வருவேன் வருவேனென்று
என் நாளும் எனை ஏமாற்றினாள்.....

வலைப்பூவில் முத்தங்களை
வரிசையாய் வழங்கினாள்......
நிஜத்திலே வேண்டுமென்றால்
கொஞ்சம் பொறு என்று சீண்டினாள்....

பல நாட்கள் முயற்சியில்
சந்திக்க ஏற்பாடு.....
அதனால் மறுத்துவிட்டேன்
என் வீட்டிலே சாப்பாடு....

விரைந்த என் வாகனம்
ஓர் விடுதிமுன் நிற்கிறது.....
அவள் வரவுக்காய் ஏங்கி
என் நெஞ்சோ தவிக்கிறது.....!
என் MP3 ல் அவள் வருவாளா?
பாடலும் ஒலிக்கிறது.....
அதை அமைதியாய் கேட்டு
என் மனமோ ரசிக்கிறது.....

ஏழு மணியிலிருந்து
நடு இரவும் வந்திட....
தூக்கமோ என் கண்ணை
முழுதாக மூடிட....

டொக் டொக்.. கதவோசை
காதில் கேட்டுவிட.....
அவசரமாய் ஓடிச்சென்று
என் கையோ கதவை திறந்துவிட.....
ஒன்பதுமணிக்கு முன் நீங்கள்
அறையை விடவேடும்....
இப்போ நேரம் எட்டரை
விரைவில் அறைத்திறப்பு தரவேண்டும்....

ஆகா...! அப்பத்தான் உணர்ந்தேன்
நான் அடிமுட்டாள் பயலென்று....
தனிமையிலே அனுபவித்தேன்
அவளின்றி முதலிரவொன்று.....

அவள் நினைவில் பல நாட்கள்
என் தூக்கம் தொலைத்திருந்தேன்.....
நேற்றுரவு அமைதியான இரவொன்றை
அவளால் பெற்றிருந்தேன்....
என் வாழ்க்கையில் மறக்காத
ஓர் இனிய முதலிரவு....
வலைப்பூவின் கிளியொன்று
பரிசளித்த ஓர் இரவு.....!

இளங்கவி

Saturday 4 July 2009

மரங்கொத்தி பறவை...


என் மரம் போன்ற இதயத்தை
இன்ப வலி தந்து
விழியெனும் கோடாலியால்
வெட்டிப் பிளந்தவள்......

அவளைச் சந்தித்தேன்
சரித்திர நிகழ்வொன்றில்
அங்கே சாயாத இச்சரித்திரத்தை
ஒரு நொடியில் சாய்த்துவிட்டாள்.....

எண்ணூறு பாகை வெப்பத்தை
தன் விழிகளினால்
என் விழிக்குள் பாய்ச்சி
என் இரும்பு இதயத்தை
ஒரு நொடியில் உருக்கிவிட்டாள்...
அந்த உருகிய இதயம்
இன்னும் ஒட்டவில்லை...
என் உள் நின்று ஓடி
என்னை உருமாற வைக்கிறது...
குளிர் நீரில் குளித்து
குளிரப் பார்க்கிறேன்...
ஆனால் கொதி நீரில் குளித்ததாய்
கொதித்துப் போகிறேன்....

நிமிடதினில் மாறும்
தமிழர் சரித்திரம் ஒருபக்கம்....
ஒரு நொடியில் நீ மாற்றிவிட்ட
என் சரித்திரமோ மறுபக்கம்....
பல கவலை மனதில் நிற்க
இன்னுமோன்றை கூட்டிவிட்டாய்.....
பகலிலும் என்னை
பாதியாய் தூங்கவைத்தாய்...

தமிழன் கவலை சொல்ல.....
மக்கள் மனங்களை வெல்ல.....
மறக்காமல் என் கடமையை
மனித நேயத்துடன் செய்கின்றேன்.....
இருந்தும் போகும இடமெல்லாம்
உன் பார்வையையும் தேடுகிறேன்...

வந்திடடி என் மர(ன)ங்கொத்தி
உன் பார்வை தந்திடடி....
என் உரிமைப் போருக்கு
முழுப்பலம் நீ தந்திடடி....

இளங்கவி......