Tuesday 14 July 2009
என் இனிய முதலிரவு....
என் வலைப்பூவில் சிக்கிய
வண்ணத்துப் பூச்சியவள்....
என் நெஞ்சில் நிறங்கள் பலதூவி
நிறக்கோலம் போட்ட மயில்.....
வகை வகையாய் பேசி
என் நெஞ்சில் தேற்றினாள்....
வருவேன் வருவேனென்று
என் நாளும் எனை ஏமாற்றினாள்.....
வலைப்பூவில் முத்தங்களை
வரிசையாய் வழங்கினாள்......
நிஜத்திலே வேண்டுமென்றால்
கொஞ்சம் பொறு என்று சீண்டினாள்....
பல நாட்கள் முயற்சியில்
சந்திக்க ஏற்பாடு.....
அதனால் மறுத்துவிட்டேன்
என் வீட்டிலே சாப்பாடு....
விரைந்த என் வாகனம்
ஓர் விடுதிமுன் நிற்கிறது.....
அவள் வரவுக்காய் ஏங்கி
என் நெஞ்சோ தவிக்கிறது.....!
என் MP3 ல் அவள் வருவாளா?
பாடலும் ஒலிக்கிறது.....
அதை அமைதியாய் கேட்டு
என் மனமோ ரசிக்கிறது.....
ஏழு மணியிலிருந்து
நடு இரவும் வந்திட....
தூக்கமோ என் கண்ணை
முழுதாக மூடிட....
டொக் டொக்.. கதவோசை
காதில் கேட்டுவிட.....
அவசரமாய் ஓடிச்சென்று
என் கையோ கதவை திறந்துவிட.....
ஒன்பதுமணிக்கு முன் நீங்கள்
அறையை விடவேடும்....
இப்போ நேரம் எட்டரை
விரைவில் அறைத்திறப்பு தரவேண்டும்....
ஆகா...! அப்பத்தான் உணர்ந்தேன்
நான் அடிமுட்டாள் பயலென்று....
தனிமையிலே அனுபவித்தேன்
அவளின்றி முதலிரவொன்று.....
அவள் நினைவில் பல நாட்கள்
என் தூக்கம் தொலைத்திருந்தேன்.....
நேற்றுரவு அமைதியான இரவொன்றை
அவளால் பெற்றிருந்தேன்....
என் வாழ்க்கையில் மறக்காத
ஓர் இனிய முதலிரவு....
வலைப்பூவின் கிளியொன்று
பரிசளித்த ஓர் இரவு.....!
இளங்கவி
Subscribe to:
Post Comments (Atom)
கவியின் கனவுகள் நனவுகளாக .......விரைவில் கிட்ட வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteநிலாமதி அக்கா
ReplyDeleteஇது ஓர் கற்பனைக் கவிதை, தற்போது இந்தக் கணனி யுகத்தில் நடந்துகொண்டிருக்கும் dating, internet love போன்ற விசயங்களை மனதில் கொண்டு எழுதப் பட்டது மற்றுப்படி வேறொன்றுமில்லை....
கருத்துக்கு மிக்க நன்றி அக்கா