Sunday 28 June 2009

வானவில்


வண்ணங்களின் பூஞ்சோலை
மனதை மகிழ்விக்கும் மாஞ்சோலை
இயற்கை உவந்தளிக்கும்
அழகான ஓர் மாலை.....

எரிக்கும் எதிரிக்கு முன்
எதிரில் நின்று சண்டையிடும்
சதாரண நீர்த்துளிகளின்
வீரத்துக்கு ஒர் குறியீடு....

இயற்கை தந்த
மழலையின் சிரிப்பு....
ஒரு கணமே மகிழ்வித்து
உடனே மறைந்துவிடும்
மனதில் உறைந்த நொடிப்பொழுது......

பக்கத்தில் காதலி; இருந்தும்
பார்வை விலக்கி உனை
பார்க்க வைக்கும்
பகலிலின் பெள்ர்ணமி......

விஞ்ஞானதில்
நிறங்க்களின் ஆராட்சிக்கு
முதலும் நீ முடிவும் நீ......
மனதிலும்
மோகத்தை தூண்டிவிடும்
கவர்ச்சிப் புன்னகை......
மொத்தத்தில்
மனதை மகிழ்வித்து
உடனேயே கொன்றுவிடும்
அழகான கொலைகாரி.....

இளங்கவி

Friday 26 June 2009

நான் ரசித்த ஊதாப்பூ


பூக்கள் நடந்து வர
வண்டுகள் மறைந்து நின்று
கண்குளிரப் பார்க்கும்
அழகான சோலை; ஆம்
அது ஒரு சாலை.....

அங்கே நானும் ஒர் பார்வையாளன்
இல்லை.. இல்லை..!
பகுதி நேர பங்காளன்....

வழமை போல்
வரிசையாய் பூக்கள் வலம்வர
அதிலே ஊருக்கு புதிசான
ஊதாப்பூ நடந்துவர
என் முழிகள் பிதுங்கும் வரை
அவளை முழுவதுமாய் பார்க்கிறேன்....

என்ன அதிசயம்
முகவரி தொலைத்தவளாய்
என்னிடம் வந்து
இந்த முகவரி தெரியுமா? என்றாள்
ஆமாம் ..தெரியும் என்றேன்
வாயில் நீர் வழிய...!

சட்டென்று அவள் அருகில்
கரு வண்டொன்று
என்ன கோவமா? கொஞ்சம் லேற் என
ச்சீ.. போடா என்றுவிட்டு
அவனைக் கைப்பிடித்து செல்கிறாள்....

என் கண நேரக்காதலி
இந்தப் பொன்வண்டு பார்த்து நிற்க
அக் கருவண்டுடன் செல்கிறாள்...

ஆவென்று வாய் திறந்து
அவள் சென்ற வழி பார்க்கிறேன்
அழகாய் ஓர் வண்டு
என் வாயுள் செல்கிறது....
ஆமாங்க..! நிஜ வண்டு..!
ச்சீ.. கறுமம் ..கறுமம் என்று
அதைக் காறித் துப்பிவிட்டு
என் கடமையைத் தொடர்கிறேன்.....


இளங்கவி

Monday 22 June 2009

ஆளுயர கொக்குக்கு அரையடி வாத்தாக.....



இந்த ஆளுயர கொக்குக்கு
அரைடயடி வாத்தாக
என்னை ஆட்டம் காணவைத்த
என் அதிசய சுந்தரியே...!
என்னடி உன் அழகு
எனக்கு புரியவில்லை: இருந்தும்
உன்னைப் பார்த்த மறுகணமே
எனக்கு தலைகால் புரியவில்லை.....


நீ உருவத்தில் குட்டை; இருந்தும்
ஒய்யார நடை உனக்கு.....
நீ ஒருகணம் பார்த்தாலும்;என் வாயில்
ஊறுமடி நீர் எனக்கு...
குலுங்கி நிற்கும்; குண்டுக்
கொய்யாப்பழ அழகி
பார்த்தாலே சிலிர்க்கவைக்கும்
நடைகொண்ட பின்னழகி.....


இதழ் சுளித்து சொக்கவைப்பாய்....
தலைமுடிவாரி கிறங்கவைப்பாய்....
கடைக் கண்ணால் பார்த்து
என்னைக் கனவிலும் சிரிக்கவைப்பாய்....
அதுவுமே போதாமல்
நான் போகும் இடமெல்லாம்
என்னை பித்தன் போல் சுற்றவைப்பாய்....


நீ எனக்கு ஓர்
அந்தியின் செவ்வந்தி.....
என் நாளும் உன் வலையில்; என்னை
சிக்கவைக்கும் ஓர் சிலந்தி....
சலங்கைபோல் சிரித்திடுவாய்
என் கனவில் நீ
கரும்புபோல் இனித்திடுவாய்...
முத்தமொன்று இடவந்தால்
தொட்டாச்சிணுங்கி போல் சுருங்கிடுவாய்....
கனவிலே வந்ததுமே
கனிவோடு பேசிடுவாய்
கட்டி அணைக்கச் சொன்னால்
எறும்பாக கடித்திடுவாய்...


சாப்பிட்ட பின் ஏப்பத்திலும்
உன்மணம் தான் வருகுதடி......
என் இதயத்தில் கலந்துவிட்ட
உன் வாசம் தான் மணக்குதடி...


கனவில் தான் நீ இனிப்பாய்
நேரில் கண்டதுமே நீ முறைப்பாய்....
கதைக்கவென்று அருகில் வந்தால்
பாவற்காய் போல நீ கசப்பாய்....
ஏனடி நீ என்னை
இப்படிப் படுத்துகிறாய்
என் நெஞ்ச்சை மண்ணெண்ணையால்
என் நாளும் கொளுத்துகிறாய்....


இந்த வாத்துக்கு இந்தக் கொக்கு
உனக்காய் இறைவன் தந்த சொத்து
வந்துவிடு நீ எனக்கு
நான் உனக்காக பிறந்த மொக்கு...


என்னை ஏற்றுக்கொள்ளு...
அதன்பின் சேர்த்துக்கொள்ளு....
சொர்க்கமென்றால் எதுவென்று
ஒரு நாழிகையில் புரியவைப்பேன்....
இருந்தும் உன் மனதில்
நான் உயரமென்று நீ நினைத்தால்
எங்கள் உயரத்தை சரி செய்ய
உனக்காக எந்தன்
காலையும் நான் வெட்டிடுவேன்....



இளங்கவி

Wednesday 10 June 2009

சிதைக்கப்பட்ட சித்திரங்கள்



அழகான இந்தச் சித்திரத்தை
அசிங்கமாய் சிதைத்தது யார் ?; தமிழர்
இனக்கொலையின் அலையடிப்பில்
நம் குழந்தையொன்றின் சிதறலை பார்....!
ஏனென்று தெரியாமல்
இறக்கும் நம் செல்வங்கள்.....
அவர் இறக்கவில்லை விதைக்கப்பட்ட
ஈழத்து நெருஞ்சி முட்கள்....
எதிரியின் கால்படும் இடமெல்லாம்
கண்டபடி குத்தி நிற்கும்....
அவன் வாழ்வின் நின்மதியை
என் நாளும் கெடுத்து நிற்கும்......


இளங்கவி

Friday 5 June 2009

என் காதலி பேரழகி

கவிதை - இளங்கவி

இருண்ட வானத்தில
அழகாய் ஓர் நிலவு.....
என் இருண்ட வாழ்க்கையிலும்
வந்தாள் ஓர் வெண்ணிலவு......

என் காலையும் அவளானாள்
மாலையும் அவளானாள்
தூக்கம் மயக்கும் இரவினிலே
என் படுக்கையிலே பூவானாள்....

அவளை மானென்று சொல்லமாட்டேன்
நடை தான் மான் அழகு
மீனென்று சொல்லமாட்டேன்
கண் தான் மீன் அழகு
மயிலென்று சொல்லமாட்டேன்
வதனம் தான் மயில் அழகு
குயிலென்றும் சொல்லமாட்டேன்
குரல் தான் குயில் அழகு....

அவள் பலகூட்டம் மான் அழகும்
பல்லாயிரம் மீன் அழகும்
பல நூறு மயில் அழகும்
பல குயிலின் பாட்ட்ழகும்
ஒன்றாகச் சேர்ந்த
பஞ்சு மெத்தை அவள்
பலதரம் சுவைத்தாலும்
சலிக்காத இன்பமவள்....

அவள் ஈழத்தில் இருந்திருந்தால்
செவ்வாளை போல் சுவைப்பாள்
இங்கே இருப்பதினாள்
ஸ்ரோபெரி போல் இனித்தாள்
தேனில் தோய்ந்து கொண்ட
செர்ரிப்பழம் சுவையவள்
தொட்டாலே கை மணக்கும்
தேன் சுவை அன்னாசி....

இரண்டு சேலத்து மாம்பழத்தை
இடைமேலே தாங்கி
அவள் நடந்துவரும் நடைபார்த்தால்
பிணம் கூட வாய் பிளக்கும்
பின்னழகை எடை போட்டால்
வாய் நீரும் வற்றிவிடும்....
முழு அழகை எடைபோட்டால்
மூச்சே நின்று விடும்....

தொட்ட இடமெல்லாம்
இலவம் பஞ்சானாள்
ஓரிடத்தில் மட்டும்
கையை சுட்டுவிடும் நெருப்பானாள்
பனிமலையாக மாறி
என் குளிர் ஜுரம் போக்கிடுவாள்
சமயததில் நெருப்பாக மாறி
கட்டிலையே பொசிக்கிடுவாள்...

இந்தக் குளிரிலே காய்வதற்கு
எனக்கு கம்பிளியாய் நீ வேண்டும்...
அதற்கு காலையிலே எழுந்து
கண்ணாடிமுன் நிற்கவேண்டும்;காரணம்
கண்ணாடியில் நான் ஒட்டிவைத்த
கற்பனையின் விம்பமே
உன்னை நிஜமாக அடைவதற்கு
நான் விண்ண்ப்பம் கோருகிறேன்....

வேண்டியவர் விண்ணப்பிக்க
எண்ணிக்கைக்கு தடையில்லை...
என் கண்ணாடிக் கற்பனைக்கு
குறைந்தாலும் வருத்தமில்லை.....
என் கட்டில் உடைந்தாலும்
புதுக் கட்டில் வாங்கிடுவேன்
என் கண்ணாடி உடைந்து விட்டால்
என் கட்டழகி உடைந்திடுவாள்....


இளங்கவி

வீழ்ந்த வீரர்களும்... வென்ற கோழைகளும்

வீழ்ந்த வீரர்களும்... வென்ற கோழைகளும்

கவிதை - இளங்கவி

முள்ளிவாய்க்கால்....
தமிழர் பிணங்கள் பல வீழ்ந்து....
மலைகள் பல சாய்ந்து.....

இரத்தத்தில்
நிலமெல்லாம் குளமாகி......
தசைகளிலே மண்ணெல்லாம் சேறாகி.....

இறுதிவரை
வீரம் சொல்லிய மண்.....
வேங்கைகை பல சாய்ந்த மண்....

வல்லரசின்
வீரர்களைச் சேர்த்து....

வாங்கி வந்த
குண்டுகளைப் போட்டு....

பறந்து வந்து
எரிமலையை போட்டு....

பாய்ந்து வரும்
பீரங்கியால் தாக்கி...

எத்தனை படுகொலையை
இலகுவாய் செய்துவிட்டு......

வெற்றியாம் வெற்றி....!
அவர்கள் வீரராம் விரர்....!

கோழையின் வெற்றி
உன் கொல்லைப்புறம் மட்டும் தான்....

வந்தவர்கள் போய்விட்டால்
உன் வாழ்க்கை மட்டம் தான்....

நம் வீரர் பலர் வீழ்ந்தாலும்
விடாத பயம் உனக்கேன்....?
நீ நூற்றுவிட்ட விடுதலை தீ
நாட்களானால் பற்றுமென்றா....?

பதறாதே கோழைகளே
பதில் அதற்கு உன்னிடம் தான்....!
என் நாளும் பக்கத்தில் வரமாட்டார்.....
உலக சன சமூகந்தான்....!

ஓர் இனத்தின் விடுதலையை
ஏளனமாய் பார்க்காதே...
வரலாறுகள் படித்துப் பார்
பின்னர் உன்கண்ணும் தூங்காதே....!

நீ வீரர்களை வீழ்த்திவிட்டாய்
நம் வீரம் விழவில்லை.....
விடுதலை கிடைக்கும் வரை
நாம் தூங்கப் போவதில்லை....

இளங்கவி

Wednesday 3 June 2009

நீ என்றும் என் காதலி....

கவிதை - இளங்கவி

அதிகாலை ஓர் அழைப்பு மணி
அவசரமாய் சென்று யாரது...?
பதில்.. நான் தான்
உன் தேவதை...!
கதவை திறக்கிறேன்
யார் தேவதையா...?
ஆம்..! அங்கே ஓர் அதிசயம்....!
அனைத்தையும் அடித்துவிடும்
அழகான ஓர் முகம்...
ஆனாலும் கண்களிலே கண்ணீர்...
கலைந்த கூந்தல்....
மாற்றான் கைபட்டு
கசங்கிய மேலாடை...
மான மறைப்புகளில்
ஆங்காங்கே இரத்தத் துளி.....
கலைந்த கூந்தலையும்
அலங்கரித்த கார்த்திகைப் பூ

என் கண்முன்னே கதறுகிறாள்
ஏன் என்னை கைவிட்டாய்..?
நான் கேட்டென்...?
எப்போ உனை கைவிட்டேன்...?
நான் உன்னைப் பார்த்ததில்லை...!

அட பாதகனே..
எனை பிரிய மனமின்றி
அன்று ஏங்கி அழுது நின்றாய்...
எனை விட்டு பிரிய முதல்
என் காலையே பிடித்து நின்றாய்.....
நீ விட்ட கண்ணீர் துளி
என் மார்பை நனைத்துவிட
என் மார்பு துடித்து நின்று
உன் அன்பை பெற்றதுவே...!
அன்று தான் சொன்னேனே
உன் கடமை வெளியிலே
உனக்காய் காத்திருக்கு
காலம் வரும் போது
நான் வருவேன்; உன்னிடம்
அதுவரை காத்திருப்பாய்...!
அத்தனையும் மறந்தாயா...?
பாவி அடியோடு எனை மறந்தாயா..?

அன்று நான் உன்னை
கவர்ந்திருந்த கட்டழகி....
இன்று நான் உனக்கு
கசக்கப்பட்டு ரோஜாவா...?
சரி என் பெயர்கூட மறந்ததா...?
நான் தான் தமிழீழம்...
எதிரியின் கைபட்டு
உடைந்துவிட்ட உன் ஈழம்...!
சரி நான் வருகிறேன்
என்னை காதலிக்க மறக்காதே...!
காதலிக்க மறந்தாலும்
காக்கவேனும் மறக்காதே...!

ஐயோ என் செல்வமே... நீயா..இது...?
அவளைத் தடுக்க என் கால்கள்
அவசரமாய் அடிவைக்க
முடியவில்லை முயன்றும் முடியவில்லை
அவள் பெயர்சொல்லிக் கதறுகிறேன்...
உடம்பெல்லாம் வியர்த்து
நெஞ்சு பதைபதைக்க
முழிக்கிறென் ..! ஆம் விழிக்கிறேன்
கனவு கலைந்து
கட்டிலில் இருந்து....
ஆம்..! என் கடமை புரிகிறது
என் கால்கலும் செல்கிறது..
ஆம் ..! தவறாமல் என் கடமைக்காய்
என் கால்கள் என் நாளும் செல்கிறது....

இளங்கவி