Monday 22 June 2009

ஆளுயர கொக்குக்கு அரையடி வாத்தாக.....



இந்த ஆளுயர கொக்குக்கு
அரைடயடி வாத்தாக
என்னை ஆட்டம் காணவைத்த
என் அதிசய சுந்தரியே...!
என்னடி உன் அழகு
எனக்கு புரியவில்லை: இருந்தும்
உன்னைப் பார்த்த மறுகணமே
எனக்கு தலைகால் புரியவில்லை.....


நீ உருவத்தில் குட்டை; இருந்தும்
ஒய்யார நடை உனக்கு.....
நீ ஒருகணம் பார்த்தாலும்;என் வாயில்
ஊறுமடி நீர் எனக்கு...
குலுங்கி நிற்கும்; குண்டுக்
கொய்யாப்பழ அழகி
பார்த்தாலே சிலிர்க்கவைக்கும்
நடைகொண்ட பின்னழகி.....


இதழ் சுளித்து சொக்கவைப்பாய்....
தலைமுடிவாரி கிறங்கவைப்பாய்....
கடைக் கண்ணால் பார்த்து
என்னைக் கனவிலும் சிரிக்கவைப்பாய்....
அதுவுமே போதாமல்
நான் போகும் இடமெல்லாம்
என்னை பித்தன் போல் சுற்றவைப்பாய்....


நீ எனக்கு ஓர்
அந்தியின் செவ்வந்தி.....
என் நாளும் உன் வலையில்; என்னை
சிக்கவைக்கும் ஓர் சிலந்தி....
சலங்கைபோல் சிரித்திடுவாய்
என் கனவில் நீ
கரும்புபோல் இனித்திடுவாய்...
முத்தமொன்று இடவந்தால்
தொட்டாச்சிணுங்கி போல் சுருங்கிடுவாய்....
கனவிலே வந்ததுமே
கனிவோடு பேசிடுவாய்
கட்டி அணைக்கச் சொன்னால்
எறும்பாக கடித்திடுவாய்...


சாப்பிட்ட பின் ஏப்பத்திலும்
உன்மணம் தான் வருகுதடி......
என் இதயத்தில் கலந்துவிட்ட
உன் வாசம் தான் மணக்குதடி...


கனவில் தான் நீ இனிப்பாய்
நேரில் கண்டதுமே நீ முறைப்பாய்....
கதைக்கவென்று அருகில் வந்தால்
பாவற்காய் போல நீ கசப்பாய்....
ஏனடி நீ என்னை
இப்படிப் படுத்துகிறாய்
என் நெஞ்ச்சை மண்ணெண்ணையால்
என் நாளும் கொளுத்துகிறாய்....


இந்த வாத்துக்கு இந்தக் கொக்கு
உனக்காய் இறைவன் தந்த சொத்து
வந்துவிடு நீ எனக்கு
நான் உனக்காக பிறந்த மொக்கு...


என்னை ஏற்றுக்கொள்ளு...
அதன்பின் சேர்த்துக்கொள்ளு....
சொர்க்கமென்றால் எதுவென்று
ஒரு நாழிகையில் புரியவைப்பேன்....
இருந்தும் உன் மனதில்
நான் உயரமென்று நீ நினைத்தால்
எங்கள் உயரத்தை சரி செய்ய
உனக்காக எந்தன்
காலையும் நான் வெட்டிடுவேன்....



இளங்கவி

No comments:

Post a Comment