Saturday 4 July 2009
மரங்கொத்தி பறவை...
என் மரம் போன்ற இதயத்தை
இன்ப வலி தந்து
விழியெனும் கோடாலியால்
வெட்டிப் பிளந்தவள்......
அவளைச் சந்தித்தேன்
சரித்திர நிகழ்வொன்றில்
அங்கே சாயாத இச்சரித்திரத்தை
ஒரு நொடியில் சாய்த்துவிட்டாள்.....
எண்ணூறு பாகை வெப்பத்தை
தன் விழிகளினால்
என் விழிக்குள் பாய்ச்சி
என் இரும்பு இதயத்தை
ஒரு நொடியில் உருக்கிவிட்டாள்...
அந்த உருகிய இதயம்
இன்னும் ஒட்டவில்லை...
என் உள் நின்று ஓடி
என்னை உருமாற வைக்கிறது...
குளிர் நீரில் குளித்து
குளிரப் பார்க்கிறேன்...
ஆனால் கொதி நீரில் குளித்ததாய்
கொதித்துப் போகிறேன்....
நிமிடதினில் மாறும்
தமிழர் சரித்திரம் ஒருபக்கம்....
ஒரு நொடியில் நீ மாற்றிவிட்ட
என் சரித்திரமோ மறுபக்கம்....
பல கவலை மனதில் நிற்க
இன்னுமோன்றை கூட்டிவிட்டாய்.....
பகலிலும் என்னை
பாதியாய் தூங்கவைத்தாய்...
தமிழன் கவலை சொல்ல.....
மக்கள் மனங்களை வெல்ல.....
மறக்காமல் என் கடமையை
மனித நேயத்துடன் செய்கின்றேன்.....
இருந்தும் போகும இடமெல்லாம்
உன் பார்வையையும் தேடுகிறேன்...
வந்திடடி என் மர(ன)ங்கொத்தி
உன் பார்வை தந்திடடி....
என் உரிமைப் போருக்கு
முழுப்பலம் நீ தந்திடடி....
இளங்கவி......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment