Sunday 22 March 2009

போராளிப் பெண்ணுக்கு அம்மாவின் கடிதம்....

கவிதை....


அன்புள்ள மகளுக்கு
உன் அம்மாவின் ஆசிர்வாதம்
காவலுக்கு செல்கிறேன் என்றாய்
எம் இனத்தை காக்க
எழுந்துவிட்டேன் என்றாய்..... !
உன் ஆசைத்தம்பியை
பட்டினிக்கு பறிகொடுத்தாய்
அவனைப்போல் பலபேரைக்காக்க
பகைவனுடன் மோதச்சென்றாய்

எனக்கும் தெரியும்
நீ புலியாக பிறக்கவில்லை
புலியாக மாற்றப்பட்டாய்
எங்களின் விடுதலைப் போரிலே
புள்ளியாக என்னையும் ; எதிரி
புலியாக வைத்துவிட்டான்
அவன் உருவாக்கிய புலிகலெல்லாம்
பிரம்மிட்டின் உருவம் போல்
வியாபித்து எழுதிடுவர் ; என்று
எதிரி இன்னமும் நினைக்கவில்லை
என்று எழுதிவைத்து நீ சென்றாய்....

பட்டினி எங்களுக்கு
பழகிவிட்ட ஒன்று என்றாய்
பசிதாங்காப் பிள்ளைக்கு
அது பரிதாபச் சாவென்றாய்
பல குண்டு போட்டு
அன்றாடம் படுகொலைகள்
அத்துடன் பட்டினியும் போட்டு
தொடங்கிவிட்டான் நர பலிகள்...

இதை உலக நாடனைத்தும்
பார்க்காத ஒவ்வோர் கணமும்
பல புலிகள் பிறக்கின்றார்
நம் மண்ணை புண்ணிய பூமியாக்க
எதிரியுடன் போரை முன்னெடுக்கின்றார்...!

மேற்குலகே நீர் சேர்ந்து
இனப்படிகொலையைத் தடுத்துவிடு...!
எம்மையும் தனித்து
நம் ஈழத்தில் வாழவிடு...!
எமை நீங்கள் வாழவிட்டால்
ஆயுதம் பிடித்த கைகள்
அரசியல் சாசனங்க்கள் எழுதாதா...?
நம் அழுக்குத்தண்ணீரும்
அமுதமாய் மாறாதா...?
நம் பசிபோக்கும் அளவிற்கு
எம் விளை நிலங்கள் விழையாதா...?
நாம் பதுங்கும் பதுங்குகுழியில்
பல ரயில்கள் ஓடாதா...?
இஸ்ரேலின் பாலை வனங்கல் கூட
பளிங்கு மண்டபமாய் மாறுகையில்
எம் தமிழீழ நிலங்கலிலே
பொன் மலைகள் எழும்பாதா...?

கொலைக்களத்தில் பிறந்து
முதலான முலைப்பால்
முண்டி முண்டி குடித்தபின்னர்
எதிரியின் குண்டுவீச்சில்
முலையொருபக்கம்; தாயின்
உடல் ஒருபக்கம்
இதை பார்த்து வளர்ந்த பிள்ளை
என்ன புத்தனாவா வளர்ந்திடுவான்...?
புலியாய் தான் வளர்ந்திடுவான்....!

சர்வதேசமே அறிந்துகொள்....!
எதிரியை அனைத்தயும் விட்டிடச்சொல்....!
புள்ளியொன்றை அழித்துவிட்டு
புலியை அழித்துவிட்டான்: என்று
சொல்லும் சிங்களனிடம்
சேதியொன்றை எடுத்துச் செல்
தமிழன் வாழ விட்டால்
எதிரியின் தலைதப்பும் என்று சொல்....!
இதைவிட்டு நம்மை அழிக்கவந்தால்
குமரிக் கண்டத்தில்
இந்தத் தீவு மட்டும் மிதந்து நிற்கும்
கோணேஸ்வரக் கடலில்
கோத்த பாயக் குலத்தின்
குருதியில்தான் உன் கப்பல் மிதக்கும்....

மகளே..! கடிதம் பார்த்து
உணர்வெல்லாம் பொங்கிவிட்டேன்
உலக்குக்கு நீ சொன்ன
உண்மையெல்லாம் அறிந்து கொண்டேன்
உன் மனதின் ஆதங்கம்
அனைத்தையும் தெரிந்து கொண்டேன்
நானும் இம் மண் காக்க
சில நாட்களிலே பயிற்சிகொள்வேன்
உன் களத்தில் முன்னரங்கை
காக்கவென்று நானும் போரிடுவேன்
கலக்கம் எதுமின்றி
காத்திடு நம் மண்ணை
உன் வீரம் கண்டுகொள்ள
களத்துக்கு நானும் விரைகின்றேன்....



இளங்கவி

2 comments:

  1. கவிதை மிகவும் அருமை.
    புலிகள் மறுபடியும் கிளர்ச்சி பெற்று எழுவார்கள்.

    ReplyDelete
  2. சரவணனுக்கு

    மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு

    ReplyDelete