Sunday 22 March 2009

நம் தலைவனின் கனவு நிஜமாக.....

கவிதை - இளங்கவி


அடிமை வாழ்வில்
குப்பையாய் கிடந்தோம்
கூட்டுவார் இன்றி
காற்றுக்கும் பறந்தோம்
ஏய் தமிழா...!
உன் தேச மண்ணில்
குப்பையாய் கிடக்கின்றாய்
கூனிக் கிடந்து
கூன் விழுந்திட்டாய் ; என்று
இந்தக் குப்பை மேட்டிலே
ஓர் பொறியாக விழுந்தாய்
சிறுதணல் மூட்டினாய்
சிறிதாகவும் புகைந்தாய்; ;பின்
செந்தணல் ஆகி
விடுதலை தீயை மூட்டினாய்
இன்றோ கோடி தமிழனின்
மனங்களில் கொழுந்து விட்டெரிந்து
விடுதலைத் தீயாய்
வீறுகொண்டு எரிகிறாய்......!

வேதனை வாழ்விலும்
வீரியம் தந்தவன்.....
எங்களின் வாழ்வுக்காய்
தன் வாழ்வையும் மறந்தவன்......
இருபதில் தொடங்கி
இருபதினாயிரம் கண்டாய்......
இன்னமும் காண்பாய்
இறுதித் தமிழனையும் மாற்றுவாய்...!

எதிரியின் பலமெல்லாம்
உன் காலில் எறும்பாய்......
எம்மவர் துரோகமும்
உனக்கு கசக்கும் மருந்தாய்.......
உன் கரும்புலிக் குஞ்சுகள்
நம் ஈழத்தின் தடுப்பாய்........
எமை காக்கும் புலிப்படை
உன் கரங்களில் பலமாய்......
எம்மை காக்கும் தெய்வம் நீ.....
உலகுக்கே கசக்கும் வீரம் நீ......

நீ மூட்டிய தீயின்றி
எதிரியை உருக்கிடும் இரும்பாய்....
நீ கண்ட கனவின்று
நிகழப்போகுது நிஜமாய்....
புலிக்கொடியின்று நம்
கொடியென ஏற்றார்......
நீ கண்ட நம் ஈழம்
நாளை நம் நாடென ஏற்பார்.....

அதுவரை ஓயாது நம்போர்
நம் கரங்கள் சேரும்......
எம் கூச்சலின் சக்தி
உன் கரத்துக்கு பலம்சேர்க்கும்.......
ஒன்றுசேர்ந்த நம் எழுச்சி
எமக்கு நம் விடியலைக் காட்டும்.......
உன் துணை கொண்டு விரைவில்
நம் விடுதலை மீட்கும்......


இளங்கவி

No comments:

Post a Comment