Saturday 29 August 2009

பிணக் காடுகளில்.....


பிணக் காடுகளில்
பேய்களின் ஊர்வலம் நடக்க.....
நாம் பிறந்த தேசம்
நாயின் வாயில்
கேவலமாய்க் கிடக்க.....

ஈழத்து வளங்களெல்லாம்
எதிரியின் காலடியில் நசுங்க....
எம் உறவின் எலும்புகளை
அவன் நாய்கள் திண்டு ருசிக்க....

ஆடுகிறான் பேயாட்டம்
அதை அடக்க இல்லை ஓர் கூட்டம்
உலகத்தின் அசிங்க அரசியலில்
அழிந்தது எம் உயிரோட்டம்....


அன்றொரு நாள் இரவில்....

ஓலைக்குடிசை இடுக்கினிலே
ஒற்றை நிலவைப் பார்த்துக்கொண்டு
மயங்கிய பூவினிலே
மது அருந்தும் வன்னிவண்டு....

இன்றைய இரவினிலே.....

இரவின் கோரப்பல்லின் இடுக்கினிலே
கொடிமல்லிகைகள் சிக்கிக்கொண்டு
எதிரியின் கோரப்பசிக்கு
சிதையும் நம் மலர்கள் இன்று.....
இரவின் அமைதியை
நிரப்பும் அழுகுரல்கள்....
இந்தக் கொடுமைகலைக் கொன்றொழிக்க
எழுவாரா நம் புலிகள்....

வன்னியில் இரத்தத்தை
வேர்களால் உள் வாங்கி....
செந்நிறப் பழங்கள் தரும்
நம் விலாட்டு மாமரங்கள்.....

நம் சாம்பல்மேட்டில் ஊர்க்குருவி
தனியாகப் படுத்துக்கொண்டு
ஆள் அரவமின்றி
அமைத்தியாய் தூங்கிறது....

அன்று அறுந்த தொப்புள்கொடி.....
இன்று அறுக்கப்படும் நம் கழுத்து.......
எதிரியின் கோரப் பசிக்கு
குதறப்பட்ட பெண் மார்பகங்கள்........
அத்தனையும் சேர்த்து
அறுசுவை உணவாக.......
ஆளில்லா நம் நிலத்தில்
அனுபவிக்கும் காட்டு நரி....

இரவின் ராச்சியத்தில்
ஈழத்து ஆன்மாக்கள்.......
புனிதத்தின் மேடுகளில்
புன்னகைக்கும் பூட்ஸ் கால்கள்.......
ஆண்மையின் அடிமேட்டில்
அசிங்கமாய் அவன் கைகள்......
இதைக் கேட்டும் மகிழ்ந்திடுவார்
தமிழராம் சில பேர்கள்......

அரக்கக் கரங்களில்
அழுது நிற்கும் நம் தேசம்......
இதை நீக்க யார் வருவார்
என்று நீங்கும் நம் தோஷம்........

எதிரி எங்கள் கோட்டையை
பெருந்தணலில் எரித்தாலும்
அத் தணலையே சுவராக்கி
நம் தேசத்தை கட்டிடுவோம்.....


இளங்கவி

No comments:

Post a Comment